Menu Left Menu Right
அரசியல்
பாஜ கூட்டணி அறிவிப்பு 31ம் தேதி பாரத் பந்த்
News Image

புதுடெல்லி : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31ம் தேதி நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ நடத்தப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. டெல்லியில் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக்கு பின், இது குறித்து கூட்டணி அமைப்பாளரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான சரத் யாதவ் பேட்டியில் கூறியதாவது:பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளதாக அரசு கூறுவது வெறும் கண்துடைப்பு. பெட்ரோல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அரசு அறிவிக்காததுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த மறுநாளே பெட்ரோல் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தது ஏன்? அரசு விரும்பும்போது விலை உயர்த்தப்படுகிறது என்பதே உண்மை. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு டீசல் மற்றும் சமையல் காஸ் விலையையும் அரசு உயர்த்தும்.சாதாரண, நடுத்தர மக்களை பற்றி அரசு கவலைப்படவில்லை என்பதையே காட்டுகிறது. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் 31ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இது குறித்து ஆலோசித்து விட்டோம். பந்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூட்டணியில் இல்லாத கட்சிகளிடமும் ஆதரவு கேட்போம். இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.போராட்டம் தீவிரம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆந்திரா உட்பட பல மாநிலங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேசம், பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தனித்தனியே ஆர்ப்பாட்டங்களும் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பெட்ரோல் மீதான உள்ளூர் வரியை குறைக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று உத்தரகண்ட் மாநிலத்தில் வரி ரத்து செய்யப்பட்டதால் லிட்டருக்கு ரூ.1.87 குறைந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் வரியை குறைத்துள்ளன.

மேலும் பல  செய்திகள்
  • அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிற்காக, டில்லிக்கு வந்திருந்த தமிழக காங்கிரசாருக்கு அந்தந்த கோஷ்டி தலைவர்கள்.....
  • பெட்ரோல் விலை உயர்வு இப்போது இல்லை : மத்திய அரசு முடிவு
  • 11ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்கிறது சி.பி.எஸ்.இ.,
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • பொன்சேகா கைதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
  • போலிவிசாவில் இந்தியா வந்த அமெரிக்கர் கைது ; சதிச்செயலில் ஈடுபட திட்டம் ?
  • 22 ம் தேதி ராகுல் திடீர் தமிழகம் வருகை ; கருணாநிதியை சந்திப்பாரா ?
  • பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  • பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  • பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  • மடியில் கனம்; வழியில் பயம்!
  • பார்த்தால் தெரியும்!
  • நாளை நல்ல நாளே...
  • மடியில் கனம்; வழியில் பயம்!
  • New flash
  • ராகுல் மீது ஷூ வீச்சு
  • செய்திகள்
  • சொத்து குவிப்பு வழக்கு : கிருபாசங்கர் சிங்கிடம் போலீசார் விசாரணை கருத்துகள்
  • உங்கள் - கருத்து *
    (Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
    இ-மெயில் *
    பெயர்*
    சரிபார்ப்பு எண்* Numbers
    மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

    * குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும்.நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    Submit
     
     
     
     
    Advertisements/Default.jpg
    இதர செய்திகள்
  • நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
  • தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
  • "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
  • சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!