| பெங்களூரு : இந்தியாவின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களான ஏசர், ஹெவ்லெட் பேக்யார்டு (ஹெச்பி) மற்றும் சாம்சங் நிறுவனங்கள், 3ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக, அந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : 3ஜி சேவையுடன், கம்ப்யூட்டர் விற்பனையை அதிகரிப்பதே, இந்த கைகோர்ப்பிற்கான முக்கிய நோக்கம் ஆகும். ஏசர் நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் டாடா டெலிசர்வீசுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், சாம்சங் நிறுவனமும், முன்னணி தொலைதொடர்பு நிறுவனத்துடன் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஹெச்பி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தையை இன்னும் துவக்கவில்லை என்றும், நிர்வாகத்தின் அனுமதி்ககாக காத்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |